உயிரிழந்த நிலையில் யானையின் சடலமொன்று கண்டெடுப்பு

உயிரிழந்த நிலையில் யானையின் சடலமொன்று கண்டெடுப்பு

ஹபரண-தும்பிகுளம் வனப்பகுதியில் மிருகங்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் ஹக்கபட்டஸ் வெடித்ததன் காரணமாக உயிரிழந்த யானையின் சடலமொன்று வனவிலங்கு அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை (16) கனேவெல்பொல வனவிலங்கு காரியாலய அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த காட்டு யானையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அலிமங்கடைக்கு அருகாமையில் உள்ள தும்பிகுளம் வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட குறித்த யானையில் வால் வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகிறது. சுமார் 10 வயதுடைய உயிரிழந்த யானையின் பிரேத பரிசோதனை அனுராதபுரம் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் சந்தன ஜயசிங்கவினால் மேற்கொள்ளப்படவுள்ளது.