
கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை
மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்போது காற்றின் வேகமானது மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமெனவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இன்றும் நாளையும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வது ஆபத்தானது எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது