
கடுவளை மேலதிக நீதவானின் வீட்டிற்கு தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இருவர் கைது
கடுவளை நீதிமன்றின் மேலதிக நீதவான் ஈ.எம்.ஹேமபால ஏகநாயக்கவுக்கு சொந்தமான கடுவளை கொத்தலாவல விகாரை மாவத்தையில் அமைந்துள்ள வீட்டிற்கு தாக்குதல் மேற்கொள்வதற்காக வருகைத்தந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்கள் இருவரையும் கொழும்பு குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளதோடு, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் தனிப்பட்ட தகராறு காரணமாக இவ்வாறு தாக்கதலை மேற்கொள்வதற்காக மேலதிக நீதவானின் வீட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.