
கட்டுநாயக்க பகுதியில் 6 கிலோ ஹெரோயினுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க பகுதியில் 6 கிலோகிராமிற்கும் அதிக நிறையுடைய ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த நபர் 45 வயதான ஒருவர் என்றும் அவரிடம் இருந்து 06 கிலோ 137 கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.