ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 124 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 124 பேர் கைது

ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள கம்பஹா மாவட்டத்தின் 18 காவல்துறை பிரிவுகளில் உள்ள மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்கும் வர்த்தக நிலையங்கள் இன்று முதல் 3 தினங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் காவற்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள 18 காவற்துறை பிரிவுகளில் ஊரட்ங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.

34 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.