PCR பரிசோதனைகள் தொடர்பில் வெளியான தகவல்

PCR பரிசோதனைகள் தொடர்பில் வெளியான தகவல்

தற்போது நாட்டில் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றானது சமூகத்திற்குள் பரவவில்லை என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்கள் அனைவரும் மினுவங்கொடை பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் மாத்திரமே என தேசிய தொற்று நோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய சூழ்நிலையில் எந்தவொரு நபருக்கும் PCR பரிசோதனைகளை தனியார் மருத்துவமனைகளில் செய்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.