
எதிர்வரும் தினத்தில் திறக்கப்படவுள்ள கடற்படை முகாம்..
கொரோன வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட வெலிசரை கடற்படை முகாமை எதிர்வரும் தினத்தில் திறப்பது குறித்து எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படை ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். சுகாதார வழிமுறைகளுக்கமைய முகாம் திறக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட கடற்படை சிப்பாய்களில் பூரண குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 740 ஆக அதிகரித்துள்ளது. நேற்றை தினத்தில் மாத்திரம் 22 கடற்படை சிப்பாய்கள் பூரண குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் 153 கடற்படை சிப்பாய் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதேநேரம், கொரோனா வைரஸ் காரணமாக நேபாளத்தில் சிக்கியிருந்த 34 இலங்கையர் காத்மண்டு நகரில் இருந்து இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் உயர்கல்விக்காக நேபாளம் சென்றிருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.