இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள அரிய வாய்ப்பு!

இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள அரிய வாய்ப்பு!

எதிர்வரும் 21ம் திகதி இந்த ஆண்டிற்கான சூரிய கிரகணம் நிகழவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சூரிய கிரகணம் தென்படாது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியரும், வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு இயக்குநருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, 2022ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ம் திகதியே இலங்கையில் அடுத்த சூரிய கிரகணம் தென்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.