உயர் தரப்பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்..!

உயர் தரப்பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்..!

நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத்தரா தர உயர் தரப்பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அனைத்து பரீட்சை நிலையங்களிலும் தொற்றும் நீக்கும் செயற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறை உயர் தரப்பரீட்சைக்காக 3 லட்சத்து 68 ஆயிரத்து 824 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளதுடன் அதற்காக 2 ஆயிரத்து 648 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.