
சுகாதார வழிகாட்டல்களுடன் புலமைப் பரிசில் பரீட்சை ஆரம்பம்
5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியவாறு நடைபெற்று வருகின்றது.
இதன்படி அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்வி வலயங்களிலும் இன்று பரீட்சை நடைபெற்று வருகின்றது.
அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேசத்தில் 250இற்கு மேற்பட்ட மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
சுகாதார பரிவினர் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை தந்ததுடன், கைகள் தூய்மைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
மாணவர்களை அழைத்து வரும் பெற்றோரும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியவாறு பாடசாலைக்கு சமூகமளித்திருந்ததை காணமுடிந்தது.
இதேவேளை நாடளாவிய ரீதியில் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு சிங்கள மொழிமூலம் 248,072 மாணவர்களும், தமிழ் மொழிமூலம் 83,622 மாணவர்களும் தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.