4 பேர் கைது..
யாழ்.கோப்பாய் காவற்துறை பிாிவுக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் நுழைந்து நீா் இறைக்கும் இயந்திரங்களை திருடிவந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடம் இருந்து நீா் இறைக்கும் இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026