பெற்றோரின் கவனயீனம்: பறிபோனது ஆண்குழந்தையின் உயிர்

பெற்றோரின் கவனயீனம்: பறிபோனது ஆண்குழந்தையின் உயிர்

மஸ்கெலியா சாமிமலை, டீசைட் தோட்டத்தில் மேல் பிரிவில் ஆண் குழந்தையொன்று வீட்டின் அருகாமையில் இருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பலியாகியுள்ளதாக மஸ்கலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருகையில்,

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல்போனதையடுத்து வீட்டில் உள்ளவர்கள் தேடியுள்ளனர்.

இந்நிலையில் வீட்டின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள சுமார் மூன்றடி ஆழமான கிணற்றில் குழந்தை விழுந்து கிடப்பதை கண்ட, குழந்தையின் தாத்தா கூச்சலிட்டதை தொடர்ந்து வீட்டிலுள்ளவர்கள் ஓடி வந்து குழந்தையை மீட்டெடுத்து மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தை இறந்துவிட்டதாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவத்தின் போது ஒன்றரை வயதுடைய பிரசாத் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத ப‌ரிசோதனை‌க்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.