
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – டுபாயில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இலங்கையில் எதிர்பாராத கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான சகல விமான நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக அபுதாபியிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தாய்நாட்டிற்கு திரும்பிச் செல்ல எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள் விமான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும் வரை பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான செயன்முறை குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் துதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.