மொரட்டுவை–சொய்சாபுர சம்பவம்: வாகன சாரதியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

மொரட்டுவை–சொய்சாபுர சம்பவம்: வாகன சாரதியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

மொரட்டுவை – சொய்சாபுர பகுதியில் உணவகம் ஒன்றில் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வாகனத்தின் சாரதியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் டீ 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் இரண்டு ரவைகள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொரட்டுவை   கிழக்கு மொரட்டுமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றின் பின்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கைக்குண்டு உள்ளிட்டவை நேற்று மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 29 ஆம் திகதி மொரட்டுவை  சொய்சாபுரம் பகுதியில் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட மகிழுந்தை செலுத்திய சாரதி புத்தள பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டார். மொரட்டுவை பகுதியை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், குறித்த சாரதியை மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் இன்று பிற்பகல் முன்னிலைப்பத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.