அம்பாறையில் வீடொன்றில் பயங்கரம்! சடலங்களாக மீட்கப்பட்ட தாயும் மகளும்..

அம்பாறையில் வீடொன்றில் பயங்கரம்! சடலங்களாக மீட்கப்பட்ட தாயும் மகளும்..

அம்பாறை - தமன, அம்பலன் ஓயா சந்தி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் சடலங்களை இன்று (01) காலை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதில் சுமார் 33 வயதுடைய தாயாரும் 10 வயதுடைய சிறுமியுமே உயிரிழந்துள்ளனர்.

கொலைக்கான காரணம் தெரியவராத நிலையில் சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்