துபாய் நாட்டில் இருந்து நாடு திரும்பிய 290 பேரில் 100 பேர் கர்ப்பிணி பெண்கள்

துபாய் நாட்டில் இருந்து நாடு திரும்பிய 290 பேரில் 100 பேர் கர்ப்பிணி பெண்கள்

துபாய் நாட்டில் இருந்து நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட இலங்கையர்களில் 100 கர்ப்பிணிப் பெண்கள் அடங்குவதாக கட்டுநாயக்க விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த இலங்கையர்கள் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு தொழில் நிமித்தம் சென்று இலங்கை திரும்ப முடியாமல் இருந்தவர்கள் எனவும், 290 இலங்கையர்கள் நேற்று நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதுடன் அவர்களில் 8 பேர் சிறுவர்கள் எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இவர்கள் நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.