50 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

50 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

களனி-வனவாசல பகுதியில் சுமார் 50 இலட்சத்திற்கு அதிகமான மதிப்புள்ள 504 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதன்போது, போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் 289,000 ரூபாய் பணத்தையும் காவல்துறையினர் குறித்த நபர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.