யாழில் மினி சூறாவளி – பயன்தரு மரங்கள் மற்றும் மதில்ச் சுவர்கள் பாறி வீழ்ந்து நாசம்.
இன்று அதிகாலை வீசிய மினி சூறாவளியினால், வீடு ஒன்றின் பயன்தரு மரங்கள் மற்றும் மதில்ச் சுவர்கள் பாறி வீழ்ந்து நாசமாகியுள்ளது!
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் இவ் மினி சூறாவளி தாக்கியுள்ளது, இதனால் வீட்டின் சுற்று மதில் 450 அடி பாறி வீழ்ந்துள்ளதுடன்,
பயன் தரு மரங்களான தென்னை, வாளை என்பன முறிந்து வீழ்ந்துள்ளது.
இன்று யாழ் குடா நாட்டில் காலை பலத்த மழை பெய்ய ஆரம்பித்திருந்த நிலையில் 04:15 மணியளவில் இவ் மினி சூறாவளி தாக்கியுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026