புதிய சுற்றறிக்கை குறித்து கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் நிலைப்பாடு

புதிய சுற்றறிக்கை குறித்து கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் நிலைப்பாடு

தாம் தொழிற்புரியும் நாட்கள் தொடர்பில் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டாலும், ஒரேயொரு வேலை நாள் மாத்திரமே மாற்றப்பட்டுள்ளதாக கிராம  உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அதன் தலைவர் சுமித் கொடிகார இதனைத் தெரிவித்தார். மேலும் இதுவொரு புதிய சுற்றறிக்கை என்று கூறமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.