கொழும்பு வாழ் மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு...!

கொழும்பு வாழ் மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு...!

கொழும்பின் சில பகுதிகளில் இன்று 15 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு 2, 3, 7, 8 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று காலை 9 மணி முதல் இரவு 12 மணி வரையான 15 மணித்தியாலங்களுக்கு இந்த நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கொழும்பு 1 பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகம் முன்னெடுக்கப்படும் எனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.