மழையின் காரணமாக நாடளாவிய ரீதியில் அதிகரிக்கும் ஆபத்து

மழையின் காரணமாக நாடளாவிய ரீதியில் அதிகரிக்கும் ஆபத்து

தற்பொழுது பெய்துவரும் மழையின் காரணமாக நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுகின்றது.

தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு இதை தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் கடந்த 17 நாட்களில் நாட்டில் 506 டெங்கு நோயாளர்கள் அடையாங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் கண்டி மற்றும் கொழும்பு மாவட்டங்களில் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இதனால் நாம் இருக்கும் இடத்தில் டெங்கு பரவாதவகையில் சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்று தொற்றுநோய் விசேட வைத்தியர்கள் பொது மக்களுக்கு அறிவித்துள்ளனர்.