வவுனியாவில் நபர் ஒருவரின் விநோத செயற்பாட்டால் பரபரப்பு!

வவுனியாவில் நபர் ஒருவரின் விநோத செயற்பாட்டால் பரபரப்பு!

வவுனியாவில் போத்தலை உடைத்து உணவாக உட்கொண்ட நபர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் அமர்ந்திருந்த நபர் ஒருவர், கண்ணாடி போத்தலை உடைத்து அதனை வாயில் போட்டு உணவாக உட்கொண்டுள்ளார்.

இதனால் காயமடைந்து வாயிலிருந்து இரத்தம் வெளியேறிக்கொண்டிருக்கும் நிலையிலும் அவர் போத்தல் துண்டுகளை உட்கொள்வதை நிறுத்தவில்லை.

இதனை அவதானித்த பொதுமக்கள் சிலர் வைத்தியசாலையில் கடமையில் இருந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனையடுத்து சம்பவத்தை அவதானித்த பொலிசார் குறித்த நபரை மீட்டு அவ்விடத்திலிருந்து அகற்றிவைத்தனர்.