இருபதாவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் வெளியான விசேட தகவல்..!

இருபதாவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் வெளியான விசேட தகவல்..!

இருபதாவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் முதலாம் வாசிப்பிற்காக எதிர்வரும் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல இதனை அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் முதலாம் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதன் பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றம் செல்ல வேண்டுமாயின் அதற்காக 7 நாட்கள் வழங்கப்படும்

அவ்வாறு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டால் நீதிமன்ற செயற்பாடுகளுக்காக 3 வாரகாலப்பகுதி வழங்கப்படும்.

நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னரே இரண்டாம் வாசிப்பிற்காக அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும் நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்.