
கொரோனா தொற்று: இதுவரை நாட்டில் 257,477 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன
கொரோனா தொற்று உறுதியான நோயாளிகளைக் கண்டறிய நேற்று (திங்கட்கிழமை) மட்டும் 1,434 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,262 ஆக அதிகரித்துள்ளதுடன் நேற்று மட்டும் 28 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் நாட்டில் இதுவரை 257,477 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று நாட்களில் நாட்டில் 93 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.