நிவ் டயமன்ட் கப்பலின் எரிபொருள் மாதிரிகளை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப நடவடிக்கை
தீப்பற்றுதலுக்கு உள்ளான எம்.ரீ. நிவ் டயமன்ட் கப்பலின் இயந்திர அறை மற்றும் கப்பலின் உள்ளக பகுதிகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட எரிப்பொருள் மாதிரிகள் இன்று அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் கையளிக்கப்படவுள்ளன.
கடற்பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் டேர்னி பிரதிப்குமார இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த எரிப்பொருள் மாதிரிகளை பெற்றுக்கொண்ட குழுவினர் இன்று கொழும்பு நோக்கி வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய கப்பலுக்குள் நேற்றைய தினம் உள்நுழைந்த குறித்த குழுவினர் எரிப்பொருள் மாதிரிகளை பெற்றுக்கொண்டனர்.
கப்பல் தீப்பற்றிய பின்னர் அந்த கடற்பகுதியில் எண்ணெய் படிமம் படர்ந்ததுடன் கடல்நீரை பரிசோதனை செய்ய கடற்பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அந்த அறிக்கை இன்று அல்லது நாளைய தினம் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெறும் என கடற்பாதுகாப்பு அதிகார சபையின் பொதுமுகாமையாளர் டேர்னி பிரதிப்குமார குறிப்பிட்டுள்ளார்.