மட்டக்களப்பில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

மட்டக்களப்பில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

மட்டக்களப்பு மாவட்டத்தை சுற்றுலா பயணிகளின் மையமாக மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் மட்டக்களப்பிலுள்ள ஒல்லாந்தர் கோட்டையை சுற்றுலா மையமாக மாற்றியமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுற்றுலா அமைச்சின் செயலாளரின் பங்குபற்றுதலுடன் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அதனை கலாச்சார விழுமியங்களை பிரதிபலிக்கின்ற நிகழ்ச்சிகள் பண்பாட்டு கலாச்சார உடைகள் உணவுகள் நூதன சாலைகள் மற்றும் வணக்க முறைகள் என மாவட்டத்திற்கென தனித்துவமான பண்பாட்டு பின்னணிகளை பிரதிபலிக்கும் விடயங்களை கொண்ட ஒரு மத்திய நிலையமாக மாற்றி அமைதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன