
தொழில் வாய்ப்பு தேடி வெளிநாடு செல்லும் இலங்கையர் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்
தொழில்வாய்ப்பிற்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்ப்பட்டுள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2019ம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு குறித்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 2018ம் ஆண்டு 2 இலட்சத்து 11 ஆயிரத்து 459 பேர் தொழில்வாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
எனினும் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 2 இலட்சத்து 3 ஆயிரத்து 186ஆக குறைவடைந்துள்ளது. இதற்கமைய தொழில்வாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்றவர்களின் எண்ணிக்கையானது 3.9 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.