நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவன் - மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு - பாசிக்குடா பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவன் நேற்று மாலை அவரது நண்பர்கள் இருவருடன் பாசிக்குடா - கல்மலை கடற்பகுதியில் நீராடிய நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனை- செம்மன் ஓடை, 4 பிரிவு ஹிஸ்புல்லா வீதியைச் சேர்ந்த, 17 வயதான, முகமட் றிஸ்வி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026