யாழில் மர்ம நபர்களால் அரங்கேற்றப்பட்ட கொடூரம்! முற்றாக நாசம்

யாழில் மர்ம நபர்களால் அரங்கேற்றப்பட்ட கொடூரம்! முற்றாக நாசம்

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி குருசர் வீதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இன்று இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதோடு வீட்டின் கண்ணாடிகளும் அடித்து நொருக்கப்பட்டு வீட்டின் வாயில் கதவும் வாள்களால் வெட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வீட்டில் அனைவரும் உறக்கத்தில் இருந்த வேளை இனந்தெரியாத குழுவொன்றினால் குறித்த சம்பவம் இன்று அதிகாலை 1.40 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைக்கப்பட்டபோதிலும், ஒரு மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது மற்றைய மோட்டார் சைக்கிள் சிறியளவில் எர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்ததன் காரணமாக வீடு முழுவதும் தீ பரவி வீட்டிலிருந்த தளபாடங்களும் எரிந்து நாசமாகி உள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.