யாழில் வியாபாரிகளுக்கு 15 ஆம் திகதி வரை கால அவகாசம்

யாழில் வியாபாரிகளுக்கு 15 ஆம் திகதி வரை கால அவகாசம்

யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட மரக்கறிச் சந்தைகள் மற்றும் இறைச்சிக் கடைகளில் பொலித்தீன் பாவனை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரப் பணிமனை சுகாதார வைத்திய அதிகாரி த.பால்முரளி இதை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு கால அவகாசம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது.

அதன் பிற்பாடு பொலித்தீன் பயன்படுத்தப்படின் வியாபார நிலைய உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலித்தீன் பாவனையை முற்றாகத் தடை செய்யும் தீர்மானம் மாநகர சபையின் மாதாந்த பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.