ஒரு காலையிழந்த பெண்ணொருவரின் உயிரைக் பறித்த டிப்பர் - சங்குப்பிட்டியில் சம்பவம்

ஒரு காலையிழந்த பெண்ணொருவரின் உயிரைக் பறித்த டிப்பர் - சங்குப்பிட்டியில் சம்பவம்

டிப்பர் - மோட்டர்சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்

தனங்கிளப்பு சந்தியில் இருந்து சங்குப்பிட்டி வீதியில் இந்த விபத்து இன்று முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

சாவகச்சேரி திசையிலிருந்து பூநகரி திசைக்குப் பயணித்த மோட்டார் சைக்கிளும் எதிர்த் திசையில் வந்த டிப்பருமே மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றது.

உயிரிழந்த பெண் அடையாளம் காணப்படவில்லை. அவர் ஒரு காலையிழந்த நிலையில் செயற்கை கால் பொருத்தப்பட்டிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் இதுவரையில் வௌியிடப்படவில்லை.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.