அவதானமாக இருக்கவும்! யாழ். மக்களுக்கு எச்சரிக்கை

அவதானமாக இருக்கவும்! யாழ். மக்களுக்கு எச்சரிக்கை

தற்போதுள்ள காலநிலை மாற்றம் அடுத்து வரும் 18 மணித்தியாலங்களுக்கு தொடர்ச்சியாக நீடிக்குமெனவும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ள மழையுடன் கூடிய காலநிலை தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

யாழ். மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையினால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாகவே யாழ். மாவட்டத்தில் கணிசமான அளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது யாழ். மாவட்டத்தில் இதுவரை எந்தவித அனர்த்தங்களோ சேதங்களோ இடம்பெற்றதாக எமக்கு அறிக்கை கிடைக்கவில்லை.

கடல் பகுதிகளில் 70 - 80கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடிய நிலை காணப்படுவதால் மீனவர்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.