அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அரசை எச்சரித்த அமைச்சர்!

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அரசை எச்சரித்த அமைச்சர்!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் மக்கள் மத்தியில் அதுகுறித்து தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்றுமாலை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தில் அதனை சமர்பிப்பதற்கு முன்னர் அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் ஒரு பொது கருத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்தத் திருத்தங்கள் குறித்து அனைவருக்கும் தெளிவுபடுத்துவதற்கு அரசாங்கம் தவறினால், கடந்த காலங்களில் இருந்த தன்னார்வத்தொண்டு நிறுவனம் சார்ந்த கலாசாரம் மீண்டும் நடைமுறையில் இருக்கும்.

அத்தோடு போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து நீக்க அரசாங்கத்தின் அதிகாரங்கள் அனைத்தும் பயன்படுத்தப்படும்.

மேலும் சட்டவிரோத துப்பாக்கி பழக்கத்திற்கும் போதைப்பொருள் வர்த்தகத்திற்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.