நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு..!

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு..!

பதில் காவல் துறை மா அதிபர்,சட்டமா அதிபர்,குற்றப்புலனாய்வு பிரிவின் தலைவர் மற்றும் விசேட விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீற்று நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் அனுருந்த சம்பாயோவால் தாக்கம் செய்யப்பட்ட சீர் திருத்த மனு மீதான விசாரணைகளை மேற்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் அனுருந்த சம்பாயோ தம்மை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை நீதவான் நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து,அவரால் மேன்முறையீற்று நீதிமன்றில் சீர் திருத்த மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மனு இன்றைய தினம் மேன்முறையீற்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்தக்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.