
கெசெல்வத்த தினுகவின் உதவியாளரான “அஸ்வர்” கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் கெசெல்வத்த தினுகவின் உதவியாளரான அஸ்வர் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உஸ்செடகெயியாவ பகுதியில் வைத்தே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 40 கிராம் ஹெரோயின் மற்றும் 15 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 2.5 கிலோகிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.