அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை

அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை

நாடுமுழுவதும் அண்மையில் திடீரென ஏற்பட்ட மின்சார விநியோகத்தடை தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்றைய தினம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

9 பிரதிநிதிகள் கொண்ட குழுவினால் தயாரிக்கப்பட்ட குறித்த அறிக்கை நேற்று முன்தினம் விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் டளஸ் அலகப்பெருமவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த அறிக்கையை இன்றைய தினம் இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

மின்சார விநியோகத்தடை ஏற்பட்டமைக்கான காரணம், எதிர்காலத்தில் அவ்வாறான நிலைமை ஏற்படுவதை தவிர்த்தல் என்பன தொடர்பான விடயங்கள் அந்தக் குழு தமது அறிக்கையில் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.