துறைமுக கடற்பகுதிக்குள் நுழைந்த 13 பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி

துறைமுக கடற்பகுதிக்குள் நுழைந்த 13 பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கொழும்பு கோட்டை துறைமுக கடற்பகுதிக்குள் படகு மூலம் சுற்றித் திரிந்துக்கொண்டிருந்த வெளிநாட்டவர் உள்ளிட்ட 13 பேரை கடற்படையினர் பொறுப்பேற்றுள்ளனர்.

குறித்த கடற்பிராந்தியமானது அதியுயர் பாதுகாப்பு வலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று (24) பிற்பகல் இரண்டு படகுகளின் ஊடாக பயணித்த போதே குறித்த நபர்களை கடற்படையினர் பொறுப்பேற்றுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பின்னர் கொழும்பு துறைமுக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்கள், பின்னர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த தரப்பினர் புகைப்படங்கள் எடுப்பதற்காக இவ்வாறு பயணித்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.