இலங்கை முதலீட்டுச் சபை-பேர்ல் எனர்ஜி நிறுவனம் முக்கிய உடன்படிக்கை
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எல்.என்.ஜி. இயற்கை எரிவாயு மிதக்கும் சேமிப்பு முனையத்தை அமைப்பதற்கான சர்வதேச நிறுவனமான பேர்ல் எனர்ஜியுடன் முதலீட்டு சபையானது உடன்படிக்கையொன்றை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்க டொலர் 97.2 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்துள்ள இந்த திட்டத்தில் சவூதி அரேபிய முதலீட்டாளர் ஒருவரும் முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த திட்டத்தின் ஊடாக வருடத்திற்கு ஒரு மில்லியன் டொன் இயற்கை எரிவாயுவை சேமிக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது.
சிறிய கப்பல்களைப் பயன்படுத்தி மாலத்தீவு மற்றும் பிற தெற்காசிய நாடுகளுக்கு இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.