
இழப்பீடு கோரிய யோஷித்த ராஜபக்ஷ..
யோஷித்த ராஜபக்ஷ, சுற்றுச்சூழல் ஆய்வாளர் சஜீவ ஷாமிகரவிடம் 500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரியுள்ளார்.
சிங்கராஜ வன பகுதியில் யோஷித்த ராஜபக்ஷவுக்கு உணகம் ஒன்று உள்ளதாக, 2020 ஆண்டு 08 ஆம் மாதம் 19 ஆம் திகதி சஜீவ ஷாமிகர வினால் ஊடக சந்திப்பு ஒன்றின்போது தெரிவித்தமை குறித்தே இவ்வாறு இழப்பீடு கோரப்பட்டுள்ளது.
சஜீவ ஷாமிகர தெரிவித்த கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை என்றுயோஷித்த ராஜபக்ஷ தனது சட்டத்தரணி மூலம் இவ்வாறு இழப்பீடு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது