யாழில் மதுப்பாவனை வீழ்ச்சி! வெளியான தகவல்

யாழில் மதுப்பாவனை வீழ்ச்சி! வெளியான தகவல்

இவ்வருடம் யாழில் மதுப்பாவனை குறைவடைந்துள்ளதாக யாழ்ப்பாண மதுவரி திணைக்கள தகவல்கள் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பில் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

யாழ்ப்பாண மதுவரி திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ்ப்பாணம், நல்லூர் , வேலணை ஆகிய பகுதிகளில் கடந்த (2019) ஆண்டுடன் ஒப்பிடும் போது பியர் நுகர்வு 27% மாக குறைவடைந்துள்ளது.

2019ஆம் ஆண்டு 21 இலட்சத்துக்கு மேற்பட்ட லீட்டர் பியர் விற்பனை இடம்பெற்றது. எனினும் இவ்வருடம் கடந்த ஆறு மாத புள்ளிவிவரங்களின்படி 7 இலட்சத்து 42 ஆயிரம் லீட்டர் பியர் நுகர்வு மட்டுமே இடம்பெற்றுள்ளது.

வைன் நுகர்வு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 21% வீதத்தால் குறைவடைந்துள்ளது.

வெளிநாட்டு சாராய நுகர்வும் 1.74 வீதத்தினால் குறைவடைந்துள்ளது. ஆனால் உள்ளூர் சாராய பாவனை 2.6 வீதமாக அதிகரித்துள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.