நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் நேற்றைய தினம் 6 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இறுதியாக தொற்றுறுதியான இருவரும் மலேஷியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய இரண்டு பேருக்கும் கென்யா மற்றம் டுபாயில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த இருவருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 953 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொவிட் 19 தொற்றுதியான மேலும் 7 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளி;ல் இருந்து நேற்று வெளியேறினர்.

தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 805 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 136 ஆக குறைவடைந்துள்ளது.