வவுனியா கோவிற்குளத்தில் தீப்பற்றவிருந்த கேஸ் சிலிண்டர்

வவுனியா கோவிற்குளத்தில் தீப்பற்றவிருந்த கேஸ் சிலிண்டர்

வவுனியா கோவிற்குளம் இந்து கல்லூரிக்கு முன்பாகவுள்ள வீடொன்றில் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் தீப்பற்றவிருந்த நிலையில் அதிரடியாக செயற்பட்ட தீயணைப்பிரிவினர் நிலமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்

இன்று இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த வீட்டில் தேநீர் வைப்பதற்காக அடுப்பினை பற்ற வைத்து அனைத்து சிறிது நேரத்தில் கேஸ் சிலிண்டரிலிருந்து கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனை அவதானித்த வீட்டார் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியதுடன் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் பாதுகாப்பாக சிலிண்டரை வெளியே எடுத்து வந்ததுடன் நீரிணை ஊற்றி ஏற்படவிருந்த அனர்த்தத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.