முற்றியது வாக்குவாதம் -கணவனை குத்திவிட்டு தப்பியோடிய மனைவி

முற்றியது வாக்குவாதம் -கணவனை குத்திவிட்டு தப்பியோடிய மனைவி

தம்பதியினரிடையே சண்டை அதிகரித்ததை அடுத்து மனைவி, கணவனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டதாக ஹிங்குராங்கொட பொலிசார்தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் 30 வயதான நபர், காயமடைந்து சிகிச்சைக்காக பொலனறுவ பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கணவர் தனது மனைவிக்கு சொந்தமான மொபைல் போனை திருடியதாகக் கூறப்படுகிறது, இதுவே சர்ச்சைக்கு வழிவகுத்தது என்றும், அந்த நபர் போதைப்பொருள் மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையானவர் என்றும் தெரிய வந்துள்ளது.

ஹிங்குராங்கொடவில் ஒரு ரேஸ் புக்கிக்கு முன்னால் மனைவி கணவனை குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு பிள்ளையின் தாயான சந்தேக நபரை கைது செய்ய விசாரணை நடந்து வருவதாக ஹிங்குராங்கொட பொலிசார் தெரிவித்துள்ளனர்.