சற்று முன்னர் மேலும் இருவருக்கு கொரோனா....!
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2953ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 2951பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 2 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
அத்துடன்,நாட்டில் கொரோனா தொற்றுறுதியான 2 ஆயிரத்து 805 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் தொற்றுறுதியான 136 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் கொரோனா தொற்றால் எற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என்பதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றது.