
உழவு இயந்திர சில்லுக்குள் சிக்குண்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு- யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் - சங்கானை விழிசிட்டியில் மணலுடன் சென்ற உழவு இயந்திரத்திற்குள் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் சங்கானை விழிசிட்டியில் இன்று பிற்பகல் வேளையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சங்கானை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் வீதியைவிட்டு விலகி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.