ஒரு வாரத்திற்குள் மேல்மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள்- 3,409 பேர் கைது

ஒரு வாரத்திற்குள் மேல்மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள்- 3,409 பேர் கைது

கடந்த ஒருவாரத்திற்குள் மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 324 விசேட சுற்றிவளைப்புக்களின் போது 3 ஆயிரத்து 409 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் யகா சம்பத் என அழைக்கப்படும் ஆனந்த சில்வா பத்தமுல்லை - சுகூதிபுர பகுதியில் வைத்து இன்றைய தினம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி ஒன்றும், 4 கிரேம் ஹெரோயின் போதைப்பொருளும், 2 வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, திட்டமிடப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினரான கெவுமா என அழைக்கப்படும் கெலும் இந்திகவுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை - எலமோதர பகுதியில் 10 கிரேமிற்கும் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருளுடன் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் இன்றைய தினம் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர், கெவுமா என்ற திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் உறுப்பினருடன் நெருங்கிய தொடர்பினை பேணியுள்ளவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர், பன்னிட்டிய - எரெவ்வல பகுதியில் இடம்பெற்ற 5 பில்லியன் ரூபாய் பெறுமதியான வைரம் மற்றும் மணிக்கக்கற்கள் கொள்ளையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான தியகம மஞ்சு என அழைக்கப்படும் அமரதுங்கலாகே தோன் மஞ்சு என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, மட்டக்குளி - மஹவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான சிற்றூர்தி ஒன்றை சோதனை செய்த வேளை 10 கிலோ கிராமிற்கும் அதிகளவான கேரள கஞ்சா போததைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மட்டக்குளி காவல்துறையினரால் குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுச் செய்தி

தம்புத்தேகம - பாதெனிய வீதியில், தொடரூந்து கடவையில் கெப் ரக வாகனம் ஒன்று தொடரூந்துடன் மோதி இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் தம்புத்தேகம மற்றும் தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் காயமடைந்தவர்களின் 4 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.