நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட புதிய அமைப்பாளர்கள்

நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட புதிய அமைப்பாளர்கள்

நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சியின் இரண்டு பிரதி அமைப்பாளர்கள் மற்றும் மூன்று உதவி அமைப்பாளர்கள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனடிப்டையில், ஆளும் கட்சியின் பிரதி அமைப்பாளர்களாக டிலான் பெரேரா, ஜெயந்த கெட்டகொட ஆகியோரும் உதவி அமைப்பாளர்களாக ஜகத் புஷ்பகுமார, மொஹமட் முஸ்ஸம்மில், அசங்க நவரத்ன ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நியமனங்கள் அமைச்சரவையின் அனுமதியுடன் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வமான பதவிகள் என பிரதமரின் செயலகம் அறிவித்துள்ளது.