புறக்கோட்டை பகுதியில் விசேட சோதனை- விபச்சாரத்தில் ஈடுபட்ட 10 பெண்கள்

புறக்கோட்டை பகுதியில் விசேட சோதனை- விபச்சாரத்தில் ஈடுபட்ட 10 பெண்கள்

புறக்கோட்டை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சுற்றித் திரிந்துக்கொண்டிருந்த விலை மாதுக்களை கைது செய்யும் நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு மத்திய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, முறைத்தவறிச் சென்ற குற்றச்சாட்டில் 10 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கோட்டை, புறக்கோட்டை, டேம் வீதி மற்றும் மருதானை ஆகிய பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்ட குறித்த பெண்களை மேலதிக விசாரணைகளுக்காக புறக்கோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.