நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி....!
நேற்றைய தினம் 4 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடுதிரும்பிய மேலும் 3 பேருக்கும், ஜப்பானில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 886 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேநேரம், கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 12 பேர் குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 658 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 217 ஆக குறைவடைந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.