தேசிய பட்டியல் உறுப்பினர்கள் 08 பேரின் பெயர் பட்டியல் அடங்கிய வர்த்தமானி வெளியானது..!

தேசிய பட்டியல் உறுப்பினர்கள் 08 பேரின் பெயர் பட்டியல் அடங்கிய வர்த்தமானி வெளியானது..!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானியில் ரஞ்சித் மத்துமபண்டா, திஸ்ஸ அத்தநாயக்க, இம்தியாஸ் பாகிர் மாகர், இரான் விக்ரமசிங்க, ஹரின் பெர்ணான்டோ, மயந்த திஸாநாயக்க மற்றும் டயனா கமகே ஆகியோரே தேசிய பட்டியல்  ஊடாக நாடாளுமன்றம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

மேலும், தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பேராசிரியர் ஹரினி அமரசூரியகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் தேசிய பட்டியல் ஆசனம் தொடர்பாக சர்ச்சை நிலவியது.

ஐக்கிய மக்கள் சக்தியில்  அங்கத்துவம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் தமது கட்சிகளுக்கும் ஒவ்வொரு ஆசனங்கள் வழங்கப்பட வேண்டும் என்று ஆரம்பத்தில் வலியுறுத்திருந்த போதிலும் பின்னர் இறுதி தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பினை தலைமைத்துவத்திடமே ஒப்படைத்திருந்தன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைத் தவிர ஏனைய பிரதான கட்சிகளில் தேசிய பட்டியல் விவகாரம் இழுபறி நிலையில் காணப்பட்டது. எனினும் தற்போது பிரதான கட்சிகள் அனைத்தும் அதற்கு தீர்வு கண்டுள்ள போதிலும் எங்கள் மக்கள் சக்தி கட்சி மாத்திரம் இதுவரையில் விபரத்தை அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.